மேலும், இந்த பாலிசி நெகிழ்வான பிரீமியம் கட்டண விருப்பங்களை வழங்குகிறது. அதோடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசி சரண்டர் செய்யவும் அனுமதிக்கிறது. பாதுகாப்பான நிதித் திட்டமிடலில் கவனம் செலுத்துவதன் மூலம், ஜீவன் ஆனந்த் நம்பகமான வருமானத்தை வழங்குவதுடன், விரிவான பாதுகாப்புத் திட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
எனினும் துரதிர்ஷ்டவசமாக விபத்து காரணமாக தனிநபர் ஒருவர் இறந்தால், கூடுதல் காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் கிடைக்கும்.. மேலும், விபத்து காரணமாக பாலிசிதாரருக்கு நிரந்தர ஊனம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், காப்பீட்டுத் தொகையை தவணைகளில் செலுத்த முடியும்.
இதன் மூலம் வழக்கமான நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதைத் திட்டம் உறுதி செய்கிறது. எல்ஐசி ஜீவன் ஆனந்தின் கீழ் வழங்கப்படும் இந்த கூடுதல் நன்மைகள் பிரீமியம் தொகைக்கு கூடுதல் கட்டணங்களை விதிக்காது என்பது மற்றொரு முக்கிய அம்சம்.