Loan Guarantor: நண்பர்கள் அல்லது உறவினர்களுக்காக கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது சாதாரண உதவி என்று நினைத்தாலும், அது எதிர்காலத்தில் பெரிய நிதிச் சுமையாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நண்பர்கள் அல்லது உறவினர்கள் நிதி சிக்கலில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது இயல்பான மனித உணர்வு. அதில் ஒரு பங்கு, அவர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட பலர் தயங்குவதில்லை. ஆனால் அந்த ஒரு முடிவு, பின்னர் பெரிய நிதி பொறுப்பாக மாறக்கூடும் என்பதுதான் பலருக்கும் தெரியாத உண்மை.
25
ஜாமீன் என்றால் வெறும் சாட்சி அல்ல
கடனுக்கு கேரண்டராக இருப்பது வெறும் சாட்சியாக கையெழுத்திடுவது அல்ல. சட்ட ரீதியாக, அந்தக் கடனின் பொறுப்பில் ஒருவராக நீங்கள் மாறுகிறீர்கள். கடன் வாங்கியவர் தவணைகளை செலுத்தத் தவறினால், வங்கி நேரடியாக ஜாமீன் அளித்தவரை அணுகும் அதிகாரம் பெற்றுள்ளது.
35
முதலில் பாதிக்கப்படுவது கிரெடிட் ஸ்கோர்
பலர் கவனிக்காமல் விடும் விஷயம், கிரெடிட் ஸ்கோரின் தாக்கம். கடன் வாங்கியவர் இஎம்ஐ செலுத்தாத தகவல், ஜாமீன் அளித்தவரின் கடன் வரலாற்றிலும் பதிவாகலாம். இதனால் எதிர்காலத்தில் வீட்டு கடன், வாகன கடன் அல்லது பிற நிதி வசதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.
சில கடுமையான சூழ்நிலைகளில், கடனை வசூலிக்க வங்கிகள் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இதனால் சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் அதன் விதிமுறைகளை முழுமையாக புரிந்துகொள்வது அவசியம்.
55
உணர்ச்சிக்கு முன் நிதி பொறுப்பு
நிதி நிபுணர்களின் ஆலோசனை தெளிவானது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன், அவர்களின் வருமானம், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் நிதி ஒழுக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு சிறிய உதவியாக தொடங்கும் முடிவு, பின்னர் பெரிய நிதி சுமையாக மாறக்கூடும் என்பதால், உணர்ச்சியை விட பொறுப்புடன் எடுப்பதே பாதுகாப்பான வழியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.