PM Kisan: விவசாயிகளே வங்கி கணக்கிற்கு ரூ.2,000 வரணுமா? அப்போ இந்த ஒரு அப்டேட்டை உடனே செய்யுங்க!

Published : Jun 07, 2026, 03:16 PM ISTUpdated : Jun 07, 2026, 03:30 PM IST

PM Kisan: பிஎம்-கிசான் திட்டத்தின் 23-வது தவணைப் பணம் ரூ.2,000 விவசாயிகளின் கணக்கில் வரவுள்ளது. இது எப்போது வரும்? KYC அப்டேட் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம்

பிஎம்-கிசான் திட்டத்தின் 23-வது தவணைப் பணம் விவசாயிகளின் கணக்கில் வரவுள்ளது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அரசு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ₹2,000 அனுப்புகிறது. கடைசியாக 22-வது தவணை மார்ச் 13, 2026 அன்று அனுப்பப்பட்டது. இப்போது விவசாயிகள் 23-வது தவணைக்காக காத்திருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 கிடைக்கிறது. இந்த தொகை, மூன்று தவணைகளாக நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை 22 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 23-வது தவணை ஜூன் மாதம் வரலாம். அரசு இன்னும் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், ஜூன் 18 ஒரு சாத்தியமான தேதியாகப் பேசப்படுகிறது. காரணம், 2024-ல் இதே நாளில்தான் 17-வது தவணை வழங்கப்பட்டது.

24
KYC அப்டேட் செய்வது அவசியம்

வேளாண்மை அமைச்சகம், ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள 23-வது தவணைக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இன்னும் KYC முடிக்காத விவசாயிகள், விரைவில் அதை முடிப்பது அவசியம். தவணைப் பணம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேதி அறிவிக்கப்படும். 23-வது தவணைப் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வர வேண்டுமா? அப்படியானால், பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகள் கட்டாயம் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், தவணைப் பணம் நிறுத்தப்படும்.

34
வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம்

இந்த செயல்முறையை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். KYC அப்டேட் செய்ய, முதலில் பிஎம் கிசான் இணையதளத்திற்குச் சென்று, OTP பயன்படுத்திப் பதிவு செய்யுங்கள். அதன்பிறகு, பணம் நேரடியாக உங்கள் கணக்கிற்கு வருவதை உறுதிசெய்ய, உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்து, NPCI உடனும் இணைத்திருக்க வேண்டும்.

44
பெயர் தகுதிப் பட்டியலில் இருப்பதை சரிபார்க்கலாம்

ஆன்லைனில் சொந்தமாக KYC செய்யத் தெரியாத அல்லது வீட்டில் ஸ்மார்ட்போன்/இன்டர்நெட் வசதி இல்லாத விவசாயிகள், தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC - Common Service Centre) நேரில் சென்றும் தங்களின் கைரேகை (Biometric Authentication) மூலமாக KYC-ஐ மிக எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

மேலும், உங்களுடைய பெயர் தகுதிப் பட்டியலில் இருக்கிறதா என்பதை பிஎம்-கிசான் இணையதளத்தில் உள்ள 'Beneficiary Status' பகுதிக்குச் சென்று, உங்களின் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு, நிலுவையில் உள்ள தவணைகளின் நிலவரத்தையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories