DA Hike: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பருத்தி மற்றும் பட்டு கைத்தறி சங்க உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படியை (DA) 10% உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது.
பருத்தி மற்றும் பட்டு கைத்தறி சங்க உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) 10% உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவால் மாநிலத்தின் பல ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
26
நீண்ட காலமாக பெரிய மாற்றம் செய்யப்படவில்லை
இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் நீண்ட காலமாக ஊதிய திருத்தத்தைக் கோரி வந்தனர். குறிப்பாக, பள்ளி சீருடைகள் தயாரிப்பது போன்ற சில வேலைகளுக்கு நீண்ட காலமாக ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.
36
நெசவு கூலியை உயர்த்திய தமிழக அரசு
புதிய அறிவிப்பின்படி, சேலை நெய்வதற்கான கூலி ₹178.36-லிருந்து ₹203.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 3.75 மீட்டர் வேட்டி நெய்வதற்கான கூலி ₹151.71-லிருந்து ₹166.26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
நெசவாளர்களின் நிதிப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, மாநிலத்தின் ஜவுளித் துறையை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு நெசவாளர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
56
தனி வாரியம் அமைக்கு முடிவு
பின்னலாடைத் தொழிலுக்கு (Knitwear Industry) தனி வாரியம் அமைக்கும் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புதிய வாரியத்தின் மூலம், இத்துறைக்கான கொள்கைகளை வகுப்பது, பிரச்சனைகளைக் கண்டறிவது மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவது எளிதாகும்.
66
ஜவுளித் தொழிலுக்கு புதிய உத்வேகம்
தமிழ்நாடு, நாட்டின் மிக முக்கியமான ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். எனவே, கைத்தறி மற்றும் பின்னலாடை ஆகிய இரண்டு துறைகளுக்கும் அரசு ஆதரவை அதிகரித்துள்ள இந்த முடிவு, மாநிலத்தின் ஜவுளித் தொழிலுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.