
1981 ஆம் ஆண்டில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு அமையான புரட்சி ஏற்பட தொடங்கியது. ஆனால் அதற்கு காரணம் ஒரு ஆண் இல்லை. தனது கணவரின் கனவை நம்பிய ஒரு பெண்ணால் அது வழிநடத்தப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்ற பெருமையை பெற்ற சுதா மூர்த்தி, மற்றொரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஒரு நிறுவனத்தை தொடங்க தனது தனிப்பட்ட அவசரகால நிதியிலிருந்து ரூ 10,000ஐ தனது கணவர் நாராயண மூர்த்தியிடம் வழங்கினார் சுதா மூர்த்தி. அவர் கடனாக வழங்கிய ரூ.10000 தான் இன்று 7.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. ஆம். இன்போசிஸ் நிறுவனம் தான் அது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சுதா மூர்த்தி, பெண்கள் பெரும்பாலும் நுழைய தயங்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து பாலினத் தடைகளைத் தகர்த்தார். பின்னர் சுதா மூர்த்தி இந்திய அறிவியல் கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் படிக்கும் போது வீட்டிலும் கல்லூரியிலும் சவால்களையும் எதிர்ப்பையும் சந்தித்தார். இந்த தடைகள் இருந்தபோதிலும், அவர் விடாமுயற்சியுடன் படித்த டாடா மோட்டார்ஸில் பணிபுரியும் முதல் பெண் பொறியாளர் ஆனார்,
சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. புத்திசாலித்தனமான அதே சமயம் மெத்தனமான மென்பொருள் பொறியாளரான நாராயண மூர்த்தியை சந்தித்தார். முற்றிலும் மாறுபட்ட ஆளுமை மற்றும் லட்சியங்களைக் கொண்ட ஒருவரை திருமணம் செய்து கொள்வதில் சவால்கள் இருந்தபோதிலும், சுதா அவரை நிபந்தனையின்றி ஆதரித்தார்,
நாராயண மூர்த்தியின் தொழில் முனைவோர் முயற்சியில் உதவுவதற்காக டாடா மோட்டார்ஸில் தனது மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டார். தனது கணவர் நிறுவனம் தொடங்குவதற்காக ரூ.10000 கடனாக வழங்கினார். சுதா மூர்த்தியின் பங்களிப்புடன் 1981-ம் இன்போசிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் நாராயண மூர்த்தி.
நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியபோது, சுதா வணிகத்தின் வெற்றிக்கு பங்களித்தது மட்டுமல்லாமல், குடும்பத்தை நிர்வகித்து, தங்களின் இரு குழந்தைகளை வளர்த்து, வீட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தினார்.
சுதா மூர்த்தியின் அசைக்க முடியாத ஆதரவு அவளுடைய கணவரின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்தது. இன்போசிஸ் நிறுவனம் இன்று நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவராக சுதா மூர்த்தி இருக்கிறார்., இது ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும், இது சமூக நோக்கங்களுக்கான அவரது அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
தனது கணவரின் வெற்றியை தாண்டி ஒரு செல்வாக்கு மிக்க நபராக சுதா மூர்த்தி இருக்கிறார். கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவராக இருக்கிறார். ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பல சிறந்த புத்தகங்களை அவர் எழுதியுள்ளார், மேலும் சமூக காரணங்களுக்காக அவர் செய்த பணி அவருக்கு பத்ம பூஷன் விருதைப் பெற்றுத்தந்தது.
சுதா மூர்த்தியின் எளிமையான நடத்தை, நேர்மையான வாழ்க்கைப் பாடங்கள், ஊக்கமளிக்கும் பேச்சு மூலம் இந்தியா முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மரியாதைக்குரிய நபராக திகழ்கிறார் சுதா மூர்த்தி..
இன்று, ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சுதா மூர்த்தி தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளித்து வருகிறார். தன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரே பெண்ணாக இருந்து, இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் இணை நிறுவனர் வரையிலான அவரின் பயணம், மன உறுதி, நெகிழ்ச்சி, மற்றும் ஒருவரால் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக உள்ளது.