கடன் வசூலிக்கும் பெயரில் நிதி நிறுவனங்கள் அத்துமீறல் செய்வதாகவும், சமூக வலைத்தளங்களில் மிரட்டுவதாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்களிடமிருந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
முக்கிய விதிகள்
1. எந்தெந்த சாதனங்களுக்குப் பொருந்தும்?: வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது லேப்டாப்பையோ நிதி நிறுவனங்கள் முடக்க முடியாது. அந்தந்த குறிப்பிட்ட சாதனத்தை வாங்குவதற்காக மட்டுமே கடன் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.
2. எப்போது முடக்கலாம்?: EMI கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் மட்டுமே படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே ஒப்பந்தப்படி முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
3. முடக்கத்தின் போது என்ன செய்யலாம்?: போனை முடக்கினாலும், வரும் அழைப்புகள் மற்றும் செல்லும் அழைப்புகளை தடுக்கக்கூடாது. அதேபோல் SMS மற்றும் அவசரக்கால SOS வசதிகளைத் துண்டிக்க அனுமதி இல்லை.
4. தனியுரிமை பாதுகாப்பு: போனை முடக்கும் போது, பயனரின் தனிப்பட்ட புகைப்படங்கள், தொடர்புகள், குறுஞ்செய்திகள் அல்லது லொகேஷன் ஹிஸ்டரி ஆகியவற்றை நிதி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் பார்க்கவோ அல்லது அணுகவோ கூடாது.
இதையும் படிங்க : Rice Business : IT வேலையை உதறி அரிசி வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!