முதலீடு செய்ய நினைக்கும் போது, “நீண்ட காலத்தில் அதிக வருமானம் தருவது எது?” என்ற கேள்வி அனைவருக்கும் வரும். வங்கி FD, PPF போன்ற நிலையான திட்டங்கள், தங்கம்-வெள்ளி போன்ற உலோகங்கள், பங்குச் சந்தை என பல விருப்பங்கள் உள்ளன. 15-30 ஆண்டுகால தரவுகளைப் பார்த்தால், பங்குச் சந்தை மற்ற அனைத்தையும் விட உயர்ந்த வருமானத்தைத் தந்துள்ளது.
உதாரணமாக, 1995–2005க்குள் நிஃப்டி 500 சுமார் 15% வளர்ச்சியைக் காட்டியது, சென்செக்ஸ் 14% வருமானம் கொடுத்தது. அதே நேரத்தில் தங்கம் 12% மட்டுமே, PPF 8% மற்றும் FD 7% அளித்தன. இதனால் நீண்ட கால முதலீட்டில் பங்குச் சந்தை முன்னிலை வகிக்கிறது.