நாடு என்ன தான் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எரிவாயு உருளை மானியம், நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், மகளிர் உதவித் தொகை என அனைத்தும் பொதுமக்களின் வங்கி கண்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் வங்கிகளில் எப்பொழுதும் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை.