இதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வதும், அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி ஆரம்பத்தில் வழங்க வேண்டிய ஆதரவை வழங்காததும், டாலருக்கான தேவை திடீரென அதிகரித்ததும் ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
நேற்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு முதன்முறையாக ரூ.90-ஐ எட்டியது. பின்னர் சற்று இலகுவாகி ரூ.89.95 ஆக இருந்தாலும், இன்று காலை மீண்டும் சரிந்து ரூ.90.15 என்ற வரலாற்றிலேயே குறைந்த மதிப்பைத் தொட்டுள்ளது. இந்த நிலையில், “ரூபாய் எது வரை சரியும்?” என்ற அச்சம் சந்தைகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.