‘AI for everyone, Everywhere’ என்ற முயற்சியை ஊக்குவித்து, உலகளாவிய அளவிலும் விரிவடைய இலக்கு வைத்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஜியோவின் செயல்திறன் வலுவாக இருந்தது. நிறுவனம் ரூ.7,110 கோடி நிகர லாபம் ஈட்டியது. வருவாய் ரூ.41,054 கோடியாக 19% உயர்ந்தது. சராசரி பயனர் வருமானம் ரூ.208.8 ஆக உயர்ந்தது.
5G பயனர் தளம் 200 மில்லியனைத் தாண்டியது. வீட்டு பிராட்பேண்ட் இணைப்புகளும் 20 மில்லியனை கடந்தன. இலவச குரல் அழைப்புகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் சூழல் மற்றும் AI வளர்ச்சி போன்ற மைல்கற்கள் ஜியோவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.