
1932-ம் ஆண்டு குஜராத்தின் சோர்வோடு என்ற இடத்தில் பிறந்தவர் தான் திருபாய் அம்பானி. இவரின் தந்தை ஒரு ஆசிரியர் ஆவார். தனது குடும்பத்தில் 3-வது குழந்தையாக பிறந்தவர் தான் திருபாய் அம்பானி. பெரிய குடும்பம் என்பதாலும் தனது தந்தையின் வருமானம் போதுமானதாக இல்லை என்பதாலும் சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார் திருபாய் அம்பானி.
தனது 16-வது வயதில் தனது மூத்த சகோதரர் உதவியுடன் ஏமன் நாட்டிற்கு சென்றார் திருபாய் அம்பானி. அப்போது அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அம்பானிக்கு ரூ.300 சம்பளம் வழங்கப்பட்டது. அங்கு சில ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் இந்தியாவில் சொந்தமாக நாடு திரும்பினார்.
இதனிடையே 1955-ம் ஆண்டு கோகிலாபென் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அனில் அம்பானி முகேஷ் அம்பானி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். 1958-ம் ஆண்டு ஏமனில் இருந்து இந்தியா வந்த அவர் ஜவுளித்தொழில் தொடங்க முடிவு செய்தார். திருபாய் அம்பானி 1960களில் தனது உறவினர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ரிலையன்ஸ் கார்ப்பரேஷனுக்கு அடித்தளம் அமைத்தார்.
முதலீடு இல்லாமலே நல்ல லாபம்.. வீட்டிலிருந்து எப்படி கூடுதல் வருமானம் ஈட்டலாம்?
இருவரும் இணைந்து மஸ்ஜித் பண்டரில் ஒரு சிறிய அலுவலகத்தில் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள். தனது நிறுவனத்தின் மூலம் பாலிஸ்டர் நூலை இறக்குமதி செய்து மசாலாப் பொருட்களை ஏமனுக்கு ஏற்றுமதி செய்தார். இதை தொடர்ந்து ரிலையன்ஸ் கமர்ஷியல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 350 சதுர அடி கொண்ட அவரின் அலுவலகத்தில் ஒரு தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள், இரண்டு உதவியாளர்கள் இருந்தனர். இந்த காலகட்டத்தில், அம்பானியும் அவரது குடும்பத்தினரும் மும்பையின் புலேஷ்வரில் உள்ள ஜெய் ஹிந்த் எஸ்டேட்டில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினர்.
ஆனால் 1965 ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானி மற்றும் திருபாய் அம்பானி ஆகியோர் தங்கள் கூட்டுறவை முடித்துக்கொண்டனர். எனினு இது திருபாய் அம்பானியின் வெற்றிக் கதையின் தொடக்கமாகும், ஜவுளித் தொழிலில் வளர்ந்து வரும் தேவையைப் பற்றி அறிந்து கொண்ட திருபாய் அம்பானி, நரோடா அகமதாபாத்தில் "விமல்" என்ற பெயரில் ஜவுளி நூற்பு ஆலையில் வணிக லாபத்திற்கான வாய்ப்பை உணர்ந்தார்.
அதே ஆண்டில், 1996ல் ரிலையன்ஸ் கார்ப்பரேஷன் மகாராஷ்டிராவில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இணைக்கப்பட்டது. முதல் செயற்கை துணி ஆலை குஜராத்தின் நரோடாவில் நிறுவப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள், நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 70 கோடி ஆக இருந்தது. இதை தொடர்ந்து அம்பானிக்கு வளர்ச்சி பாதையாகவே இருந்தது. இன்று திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
துரதிர்ஷ்டவசமான மரணம்
திருபாய் அம்பானி முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பக்கவாதத்தால் அவரது வலது கை செயலிழந்ததால், தனது இரு மகன்களிடமும் தனது தொழிலை ஒப்படைக்க முடிவு செய்தார். ஜூன் 24, 2002 அன்று அவர் இரண்டாவது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
SIP முதலீடு மூலம் பல லட்சம் சேமிக்கலாமா... அது எப்படி வேலை செய்யுது? முதலீடு செய்வது எப்படி?
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி மறைந்தார். அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் வணிக உலகிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. எனினும் தனது மகன்களுக்கு அவர் சொத்துக்களை பிரிக்காததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
திருபாய் அம்பானியின் இரு மகன்களும் அவர் விட்டு சென்ற தொழிலை சிறப்பாகவே நடத்தினர். இதில் அனில் அம்பானி கொஞ்சம் பின்னடவை சந்தித்தாலும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் திகிழ்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.