நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கும், நிம்மதியாக இருக்கவும், எதிர்காலத்திற்கும் முதலீடு செய்யும் முக்கிய முடிவு – வீட்டு மனை வாங்குவது. சமீபத்தில், பலர் 350 சதுர அடியில் வீட்டுமனை கிடைக்கும் என விளம்பரம் செய்து வருகின்றனர்.இத்தகைய சிறிய மனைகள் குறித்து சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்தால்தான் தவறான முடிவு எடுக்காமல் பாதுகாப்பாக முடிவு செய்ய முடியும்.
350 சதுர அடிக்கு அனுமதி கிடைக்குமா?
சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் டி.டி.சி.பி (DTCP) போன்ற அரசு நிர்வாக அமைப்புகள் குறைந்தபட்ச வீட்டு மனை அளவுக்கு அனுமதியை வழங்குகின்றன. பொதுவாக சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி விதிமுறைகள்படி சாதாரணம் குறைந்தபட்சம் சுமார் 440 சதுர அடி (22 அடி x 20 அடி) இருக்க வேண்டும்.350 சதுர அடி என்பது இந்த அளவைவிட குறைவாக உள்ளது.இதனால் தனியாக அந்த அளவுக்கு லே-அவுட் அப்பிரூவல் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் மிகக் குறைவு.
சிறிய மனைகள் ஏன் விற்பனை செய்யப்படுகின்றன?
பெரிய லே-அவுட்களில் சில சிறிய கார்னர் (கோண) பிளாட்கள் இருப்பதை நிறுவனம் காட்டலாம். உண்மையில் இதை மார்க்கெட்டிங் ட்ரிக் ஆகப் பயன்படுத்தி, “சிறிய இடத்தில் குறைந்த விலை” என மக்களை ஈர்க்கின்றனர்.
அந்த மனைக்கு பில்டிங் அனுமதி கிடைக்குமா?
அப்ரூவல் பெறுவது மிகவும் கடிமான இருக்கும் என்கின்றனர் அத்துறை வல்லுணர்கள். வீடு கட்டும் போதும் நான்புறமும் இடம் விட வேண்டிய கட்டாயம் இருப்பதால் 350 சதுரஅடி மனையில் பில்டிங் கட்டுவது மிகவும் சிரமம் என்கின்ரனர் கட்டிடக்கலை நிபுணர்கள்