வெளியாகிறது புதிய ரூ.50 தாள்! அப்போ பழைய 50 ரூபாய் செல்லுபடியாகாதா? RBI சொன்ன முக்கிய தகவல்

Published : Feb 14, 2025, 11:08 AM ISTUpdated : Feb 14, 2025, 11:13 AM IST

புதிய 50 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் கூடிய புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்பு வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டுகளின் செல்லுபடி தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளது.

PREV
14
வெளியாகிறது புதிய ரூ.50 தாள்! அப்போ பழைய 50 ரூபாய் செல்லுபடியாகாதா? RBI சொன்ன முக்கிய தகவல்
உங்களிடம் 50 ரூபாய் நேட்டு உள்ளதா? புதிய ரூ.50 நோட்டை வெளியிடுகிறது RBI

புதிய 50 ரூபாய் நோட்டு: 50 ரூபாய் நோட்டு தொடர்பாக பெரிய அப்டேட் வந்துள்ளது. விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு சந்தைக்கு வரும். ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

24
ரிசர்வ் வங்கி ஆளுநர்

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்குப் பதிலாக மல்ஹோத்ரா டிசம்பர் 2024 இல் பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) வரிசையின் 50 ரூபாய் நோட்டுகளைப் போலவே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

34
50 ரூபாய் தாள்

புதிய 50 ரூபாய் நோட்டு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மகாத்மா காந்தி (புதிய) வரிசையின் 50 ரூபாய் நோட்டின் அளவு 66 மிமீ x 135 மிமீ மற்றும் அதன் அடிப்படை நிறம் ஃப்ளோரசன்ட் நீலம் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டின் பின்பகுதியில் ஹம்பி தேருடன் இருக்கும் படம், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கிறது.

 

அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் 

இந்திய ரிசர்வ் வங்கி முன்பு வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் நாணயமாக இருக்கும்.

44
சஞ்சய் மல்கோத்ரா

2000 ரூபாய் நோட்டுகளில் 98.15 சதவீதம் திரும்பி வந்துள்ளது

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நோட்டுகளை மக்கள் கையில் வைத்துள்ளனர். சமீபத்தில் ரிசர்வ் வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. ஜனவரி 31, 2025 க்குள், 98.15 சதவீத இளஞ்சிவப்பு நோட்டுகள் வங்கி முறைக்கு திரும்பிவிட்டதாகவும், இன்னும் 6,577 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மக்களிடம் எஞ்சியுள்ளன என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, சந்தையில் ரூ.6,691 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இருந்தன. மே 19, 2023 அன்று, சுத்தமான நோட்டுக் கொள்கையின் கீழ், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்தது.

Read more Photos on
click me!

Recommended Stories