ஏற்கனவே சில நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர் தவணை செலுத்தவில்லை என்றால், போனில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு ஆப்பின் மூலம், அந்த சாதனத்தை லாக் செய்யும் முறையை பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஆர்பிஐ இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இப்போது புதிய விதிமுறைகளுடன் இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது.