கடன் தவணை கட்டாமல் இருந்தால் மொபைல் லாக் செய்யப்படும்? ஆர்பிஐ அதிரடி முடிவு

Published : Sep 12, 2025, 08:45 AM IST

ஆர்பிஐயின் இந்த முன்முயற்சி செயல்படுத்தப்பட்டால், வங்கிகள் பாதுகாப்பாக இருப்பது, வாடிக்கையாளர்கள் தவணைத் தொகையை நேரத்தில் செலுத்த வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும்.

PREV
15
ஆர்பிஐ புதிய விதி

இந்தியாவில் மொபைல் சந்தை மிகவும் பரந்தது. TRAI தரவின்படி, நாட்டில் 116 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில், ஆர்பிஐயின் இந்த முன்முயற்சி செயல்படுத்தப்பட்டால், வங்கிகள் பாதுகாப்பாக இருப்பது, வாடிக்கையாளர்கள் தவணைத் தொகையை நேரத்தில் செலுத்த வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும்.

25
மொபைல் தவணை கடன்

ஏற்கனவே சில நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர் தவணை செலுத்தவில்லை என்றால், போனில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு ஆப்பின் மூலம், அந்த சாதனத்தை லாக் செய்யும் முறையை பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஆர்பிஐ இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இப்போது புதிய விதிமுறைகளுடன் இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது.

35
போன் லாக் விதி

இந்தியாவில் இன்று பெரும்பாலான மொபைல் போன்கள், சிறிய தனிநபர் கடன்கள் அல்லது தவணை முறையில் வாங்கப்படுகின்றன. 2024-ல் வெளியான ஹோம் கிரெடிட் பைனான்ஸ் ஆய்வின் படி, மின்னணு சாதனங்களில் மூன்றில் ஒரு பங்கு பொருட்கள் தவணை முறையில் வாங்கப்படுகின்றன. இதனால் வங்கிகளுக்கு சிறிய அளவிலான கடன் சுமைகள் அதிகரித்து வருகின்றன.

45
வங்கி வழிகாட்டுதல்

இதனை சமாளிக்க, ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) ஒரு புதிய நடவடிக்கையை பரிசீலித்தது. அதாவது, தவணையில் மொபைல் போன் வாங்கியவர் பணம் செலுத்தாமல் விட்டால், வங்கி அந்த போனை தூரத்தில் இருந்து தானாகவே லாக் செய்யும் அதிகாரத்தைப் பெறலாம். இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை வங்கிகளின் மோசமான கடன் (NPA) சுமையை குறைப்பதற்காக செய்யப்பட்டுள்ளது.

55
வாடிக்கையாளர் ஒப்புதல்

புதிய விதியின்படி, வாடிக்கையாளர் முன்பூர்வ சம்மதம் அளித்தால்தான் போன் லாக் செய்யப்பட வேண்டும். மேலும், வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும், போன் லாக் செய்யப்பட்ட பிறகு உள்ளே உள்ள தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு அனுமதி இருக்காது. இவ்வாறு, வங்கிகள் தங்களது சிறிய கடன்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories