நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இனைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்ற காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.
இதனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.