வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அதன் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக போராட விடக்கூடாது என்று அதன் பெற்றோர் நினைக்கின்றனர். மேலும் குழந்தைக்கு, சிறந்த வாழ்க்கையைத் தரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தை பிறந்த உடனேயே பெற்றோர்கள் அனைத்து வகையான நிதித் திட்டமிடலையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தைகளின் பெயரில் பிபிஎஃப், சுகன்யா போன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள், சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்காவது மொத்தத் தொகையை முதலீடு செய்கிறார்கள்.
நீங்களும் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் அதாவது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்யுங்கள். வங்கிகளை விட தபால் அலுவலகத்தில் 5 வருட FD சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் விரும்பினால், தொகையை மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்க செய்யலாம், அதாவது ரூ.5,00,000 முதலீடு செய்தால், ரூ.15,00,000க்கு மேல் சம்பாதிக்கலாம். இது எப்படி வேலை செய்யும் என்று தெரிந்து கொள்ளுங்கள்-