குறையும் கரண்ட் பில்: மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதால், மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணிசமாகக் குறையும்.
300 யூனிட் வரை இலவச மின்சாரம்: தகுதியான பயனாளிகள், சோலார் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு தங்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். இதனால் மின் கட்டணச் செலவு மிச்சமாகும்.
அரசு மானியம்: இந்த திட்டத்தில் அரசு மானியம் வழங்குகிறது. 2 கிலோவாட் சிஸ்டம் வரை ஆகும் செலவில் 60%, 2-3 கிலோவாட் கூடுதல் திறனுக்கு ஆகும் செலவில் 40% மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 3 கிலோவாட் சிஸ்டம் அமைக்கும் ஒரு குடும்பத்திற்கு ₹78,000 வரை மானியத்தை அரசு வழங்குகிறது.
கூடுதல் மின்சாரம் மூலம் வருமானம்: ஒரு குடும்பம், தாங்கள் பயன்படுத்தியதை விட அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அந்த கூடுதல் மின்சாரத்தை நெட் மீட்டரிங் சிஸ்டம் மூலம் கிரிட்டுக்கு விற்கலாம். இதன் மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும்.
யாருக்கெல்லாம் இந்த பலன் கிடைக்கும்?: இந்த திட்டத்தில் சேர நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். சோலார் பேனல்கள் பொருத்த மொட்டை மாடியுடன் கூடிய சொந்த வீடு இருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டில் முறையான மின் இணைப்பு இருக்க வேண்டும்.
LPG New Rules 2026: இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!