EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!

Published : Jun 01, 2026, 07:00 PM IST

PM Surya Ghar Free Electricity Scheme: பிஎம் சூர்யா கர் இலவச மின்சார திட்டத்தின் விதிகள் மாறியுள்ளன. இதன் மூலம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதோடு, மானியமும் பெறலாம். இந்த திட்டத்தில் எப்படி இணைவது என்பது குறித்த முழு விவரம் இங்கே. 

PREV
14
PM Surya Ghar Free Electricity Scheme

பிஎம் சூர்யா கர் இலவச மின்சார திட்டம் குறித்து ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இப்போது ஒவ்வொரு 8 நாட்களிலும் சுமார் 1 லட்சம் பேர் சோலார் சிஸ்டத்தை தங்கள் வீடுகளில் பொருத்தி வருகிறார்கள்.

முன்பெல்லாம் இந்த திட்டத்தின் பலன்கள் மக்களுக்குக் கிடைக்க 47 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது, செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதால், பலன்கள் வேகமாக மக்களைச் சென்றடைகின்றன. நாடு முழுவதும் தினமும் சராசரியாக 12,000 பேர் இந்த இலவச மின்சார திட்டத்தில் பதிவு செய்கிறார்கள். 

பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட இந்த பிரதம மந்திரி சூர்யா கர் திட்டம், மத்திய அரசின் ஒரு முக்கிய சோலார் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம், தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பதும், மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதும் தான்.

RBI: இனி 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது? வரப்போகும் புதிய நோட்டுகள்.! ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு.!

24
இலவச மின்சார திட்டம்னா என்ன?

இந்த திட்டத்தின் கீழ், தகுதியான வீடுகளுக்கு மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் பொருத்தி, அதன் மூலம் மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவதே இலக்கு. வீடுகளில் முறையான மின் இணைப்பு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேரலாம். சோலார் பேனல்கள் பொருத்துவதற்கான ஆரம்பச் செலவைக் குறைக்க, மத்திய அரசு நிதி உதவியும் (CFA) வழங்குகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மானிய உதவியாக பயனாளிகளுக்கு ₹17,967 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

குப்பையில் கொட்டும் தங்கம்.! கழிவிலிருந்து கோடிகள்.! லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரப்போகும் புதிய புரட்சி.!

34
என்னென்ன நன்மைகள்?

குறையும் கரண்ட் பில்: மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதால், மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணிசமாகக் குறையும்.

300 யூனிட் வரை இலவச மின்சாரம்: தகுதியான பயனாளிகள், சோலார் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு தங்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். இதனால் மின் கட்டணச் செலவு மிச்சமாகும்.

அரசு மானியம்: இந்த திட்டத்தில் அரசு மானியம் வழங்குகிறது. 2 கிலோவாட் சிஸ்டம் வரை ஆகும் செலவில் 60%, 2-3 கிலோவாட் கூடுதல் திறனுக்கு ஆகும் செலவில் 40% மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 3 கிலோவாட் சிஸ்டம் அமைக்கும் ஒரு குடும்பத்திற்கு ₹78,000 வரை மானியத்தை அரசு வழங்குகிறது.

கூடுதல் மின்சாரம் மூலம் வருமானம்: ஒரு குடும்பம், தாங்கள் பயன்படுத்தியதை விட அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அந்த கூடுதல் மின்சாரத்தை நெட் மீட்டரிங் சிஸ்டம் மூலம் கிரிட்டுக்கு விற்கலாம். இதன் மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும்.

யாருக்கெல்லாம் இந்த பலன் கிடைக்கும்?: இந்த திட்டத்தில் சேர நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். சோலார் பேனல்கள் பொருத்த மொட்டை மாடியுடன் கூடிய சொந்த வீடு இருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டில் முறையான மின் இணைப்பு இருக்க வேண்டும்.

LPG New Rules 2026: இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!

44
விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். முதலில், பிரதம மந்திரி சூர்யா கர் தேசிய போர்ட்டலுக்குச் செல்லுங்கள். உங்கள் மாநிலம், மின்சார வாரியத்தின் (DISCOM) விவரங்கள், நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள். லாகின் செய்து, மொட்டை மாடி சோலார் திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். உங்கள் பகுதி மின்சார வாரியம் (DISCOM) இதற்கு ஒப்புதல் வழங்கும். 

அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் மூலம் சோலார் சிஸ்டத்தை நிறுவ வேண்டும். நிறுவிய பிறகு, நெட் மீட்டரிங்கிற்கு விண்ணப்பிக்கவும். சரிபார்ப்பு மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு, உங்கள் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்கவும். சரிபார்ப்பு முடிந்ததும், மானியத் தொகை நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். முறையான ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories