எந்தெந்த காரணங்களுக்கு கடன் கிடைக்கும்
கடைக்காரர்கள், வர்த்தகர்கள், விற்பனையாளர்களின் தொழில் கடன்கள். சிறு வணிக நிறுவனங்களுக்கான உபகரண நிதி, ஆட்டோ உள்ளிட போக்குவரத்து வாகனங்களுக்கான கடன்கள், கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த விஷயங்கள், சிறு கடைகள், தண்ணீர் கேன் பிஸ்னஸ், வணிக நோக்கங்களுக்காக டிராக்டர்கள் அல்லது இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துதல் என இந்த காரணங்களை குறிப்பிட்டு முத்ரா கடன்களை வாங்கிக் கொள்ள முடியும். முதரா கடனின் வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் அந்தந்த வங்கிகள், தனியார் நிறுவனங்களை பொறுத்து இது மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
52 கோடிக்கும் அதிகமான கடன்கள்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.32.61 லட்சம் கோடி மதிப்பிலான 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Gold and Crude Oil: தங்கத்தின் விலையை கச்சா எண்ணெய் நிர்ணயம் செய்வது எப்படி?