சொந்தமாக நிலம் இல்லாதவர்கள், குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் திட்ட நன்மை பெற்றிருந்தால், 18 வயதுக்கு குறைவானவர்கள், அரசு நில உரிமையாளர்கள், NRI களுக்கு இந்த தவணை கிடையாது. அதேபோல், அரசு/அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள், அதிக ஓய்வூதியம் பெறுவோர், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், CA போன்ற தொழிலில் ஈடுபட்டவர்களும் இதில் சேர முடியாது.