Pakistan Train: பாகிஸ்தான் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய நினைக்கிறீர்களா? ஜாக்கிரதை! அங்கே டிக்கெட் இல்லாத பயணத்துக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கிறாங்க. இந்த அபராதத்தை எப்படி கணக்கிடுறாங்கன்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க.
சரியான டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது சட்டப்படி குற்றம். இந்திய ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், ரயில்வே சட்டம் பிரிவு 137-ன் கீழ் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் என்ன மாதிரியான அபராதம் விதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
24
பாகிஸ்தான் ரயில்களில் அபராதம்
பாகிஸ்தான் ரயில்வே துறையும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்கிறது. ரயில் புறப்பட்ட இடத்திலிருந்தே அபராதத் தொகை கணக்கிடப்படுகிறது. டிக்கெட் பரிசோதகர் பயணியை பிடிக்கும் இடத்திலிருந்து இது கணக்கிடப்படுவதில்லை.
34
டிக்கெட் இல்லாத ரயில் பயணம்
டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வதை முழுமையாகத் தடுக்க, பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகளுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானில், வெறும் அசல் டிக்கெட் கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பயணிகளை விட்டுவிடுவதில்லை.
டிக்கெட் இல்லாத பயணிக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. விதிகளின்படி, டிக்கெட் கட்டணத்தை விட இரண்டு மடங்கு தொகையைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, டிக்கெட் விலை 1,000 ரூபாய் என்றால், பயணி 2,000 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.