ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அப்டேட்.. NPS-க்கு புதிய உத்தரவாத திட்டம் ரெடி?

Published : Jan 15, 2026, 11:53 AM IST

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

PREV
12
ஓய்வூதிய பாதுகாப்பு

ஓய்வூதியதாரர்களின் ஓய்வுக்குப் பிந்தைய வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதியது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருங்காலத்தில் நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உயர் மட்ட நிபுணர் குழு ஒன்றை PFRDA அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் முக்கிய பணி, NPSக்குள் சட்டப்பூர்வமாக செயல்படுத்தக்கூடிய “உத்தரவாத ஓய்வூதிய அமைப்பை உருவாக்குவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தயாரிப்பதாகும். சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உறுதியான தொகை கிடைக்கும்படி நடைமுறை உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் NPS திட்டம் மேலும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி அரசின் “வளர்ந்த பாரதம் 2047” என்ற பெரிய இலக்குடன் இணைந்து செல்கிறது என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார பாதுகாப்பு, வயதான காலத்தில் கண்ணியமான வாழ்க்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

22
ஓய்வூதிய செலுத்தும் கட்டமைப்பு

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவுக்கு, இந்திய திவால் மற்றும் நொடித்துப் போன வாரியத்தின் (IBBI) முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ். சாஹு தலைமை வகிக்கிறார். இதில் சட்டம், நிதி, காப்பீடு, ஆக்சுவேரியல், மூலதனச் சந்தை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவையான வெளி நிபுணர்களை ஆலோசனைகளுக்காக இணைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது PFRDA ஆலோசனைக் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லவும், உத்தரவாத ஓய்வூதியம் கட்டணங்களுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கவும் இந்த குழு செயல்படும். சேமிப்பு கட்டத்திலிருந்து ஓய்வூதியம் பெறும் கட்டத்திற்கு செல்லும் போது சந்தாதாரர்களுக்கு செயல்முறை எளிமையாகவும், வெளிப்படையாகவும், தடையின்றியும் இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கிறது.

மேலும் லாக்-இன் காலம், திரும்பப் பெறும் வரம்புகள், விலை நிர்ணயம், சேவை கட்டணங்கள் போன்ற செயல்பாட்டு அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும். இடர் மேலாண்மை, மூலதனத் தேவைகள், வரி விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தவறான விற்பனையைத் தடுக்கவும், உறுதி ஓய்வூதியம் மற்றும் "சந்தை அடிப்படையிலான உத்தரவாதம்" ஆகியவற்றின் வேறுபாட்டை மக்கள் புரிந்துகொள்ளவும் ஒரே மாதிரியான வெளிப்படுத்தல் முறையும் உருவாக்கப்பட உள்ளது. இந்நிபுணர் குழு பரிந்துரைகள் எதிர்காலத்தில் இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories