வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க கணிப்புகளுக்கு மத்தியில், மத்திய வங்கி தனது 'நியூட்ரல்' நிலைப்பாட்டைத் தொடர்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026க்கு பிறகு வெளியான முதல் நாணயக் கொள்கை அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்துள்ளது. இருமாத ஒருமுறை நடைபெறும் நாணயக் கொள்கைக் குழு (MPC) மூன்று நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முடிவை அறிவித்தார்.
25
மத்திய வங்கி கொள்கை
வலுவான பொருளாதார வளர்ச்சியும், வர்த்தக வரிகளின் அழுத்தம் குறைந்திருப்பதும், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதே சந்தையின் பொதுக் கணிப்பாகும். அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக இருப்பதாகவும், உலகின் முக்கிய பொருளாதாரங்களிலேயே இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
35
ரெப்போ விகிதம் மாற்றமில்லை
மேலும், ஆர்பிஐ தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை “நியூட்ரல்” என்றே தொடர்ந்துள்ளது. இதன் மூலம், குறைந்த வட்டி விகித சூழல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்ற சிக்னலை மத்திய வங்கி அளித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் நிலைத்த பாதையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பணவீக்கம் குறித்த கணிப்புகளிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (மார்ச்–மே) பணவீக்கம் 4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த காலாண்டில் இது 4.2% ஆக உயரலாம். நடப்பு நிதியாண்டின் மொத்த சில்லறை பணவீக்கம் 2.1% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
55
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 6.9% மற்றும் இரண்டாம் காலாண்டில் 7% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடரும் என்பதைக் காட்டுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.