Business Loan: வேலை போனாலும் வாழ்க்கை போகாது.! 50 லட்சம் கடன்.! 35% மானியம்.! அரசு தரும் சுயதொழில் தீர்வு.!

Published : Dec 20, 2025, 09:38 AM IST

மத்திய அரசின் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் தொழிலின் தன்மை மற்றும் பயனாளியின் பிரிவைப் பொறுத்து 15% முதல் 35% வரை அரசு மானியமும் வழங்கப்படுகிறது. 

PREV
19
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது. கல்வி முடித்திருந்தாலும், நிரந்தர வேலை கிடைக்காத சூழலில் பலர் சுயதொழிலைத் தான் எதிர்காலமாகக் காண்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலீடு, கடன் வசதி, வழிகாட்டுதல் ஆகியவை இல்லாததால் பல நல்ல முயற்சிகள் ஆரம்பத்திலேயே முடங்கிவிடுகின்றன. இதை மாற்றும் நோக்கத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முக்கியமான திட்டமே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP). இந்தத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் ரூ.50 லட்சம் வரை கடனும், அதனுடன் அரசு மானியமும் பெற முடியும். இடைத்தரகர்கள் இன்றி, முழுமையாக ஆன்லைன் வழியாக செயல்படும் இந்தத் திட்டம் சுயதொழில் கனவுகளை நனவாக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

29
மத்திய அரசு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற முக்கியமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், தொழிலின் தன்மை மற்றும் பயனாளியின் பிரிவை பொருத்து 15% முதல் 35% வரை அரசு மானியமும் வழங்கப்படுகிறது.

39
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்

இந்தத் திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் புதிய சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களை தொடங்குவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. தொழில் விரிவாக்கம் அல்லது நவீனமயமாக்கலுக்காக இந்தக் கடன் வழங்கப்படாது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

49
கடன் வரம்பு

உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரை, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். பொதுப்பிரிவினர் தொழில் முதலீட்டில் 10% செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் 5% மட்டும் முதலீடு செய்தால் போதும்.

59
மானியம்

கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 35% வரை, நகர்ப்புறங்களில் 25% வரை மானியம் வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு கிராமப்புறங்களில் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 15% மானியம் கிடைக்கும்.

69
விண்ணப்பம்

அனைத்து செயல்முறைகளும் ஆன்லைனில் நடைபெறும். www.kviconline.gov.in என்ற தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒரு மாத கட்டாய பயிற்சி முடித்த பின் கடன் வழங்கப்படும். 

79
தகுதி

18 வயதுக்கு மேல், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன், முன்பே அரசு உதவி பெறாதவர் ஆகியோர் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு பொருளாதார தன்னிறைவு பெற ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

89
அரசு மானியம், கட்டாய பயிற்சி, வங்கி ஆதரவு

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்பது வேலை தேடும் இளைஞர்களை வேலை வழங்குபவர்களாக மாற்றும் சக்தி கொண்ட ஒரு திட்டமாகும். குறைந்த சொந்த முதலீட்டில் அதிக அளவு கடன், அரசு மானியம், கட்டாய பயிற்சி, வங்கி ஆதரவு போன்ற பல அம்சங்கள் இந்தத் திட்டத்தை தனித்துவமாக்குகின்றன. 

99
நிலையான வருமானம் பெற இது ஒரு தங்க வாய்ப்பாகும்

குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தங்கள் சொந்த பகுதிகளிலேயே தொழில் தொடங்கி நிலையான வருமானம் பெற இது ஒரு தங்க வாய்ப்பாகும். சரியான திட்ட அறிக்கை, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சி இருந்தால் இந்த அரசு திட்டம் வாழ்க்கையை மாற்றும் ஒரு உறுதியான படிக்கட்டாக அமையும். சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories