புதிய எல்பிஜி கேஸ் கனெக்ஷன் கொடுப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதனால், மே மாதத்திலும் புதிய கனெக்ஷன் கிடைப்பது சந்தேகம்தான். எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.
சப்ளையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர, OTP அடிப்படையிலான டெலிவரி முறையை நிரந்தரமாகவும், முழுமையாகவும் கட்டாயமாக்குகிறார்கள். மேலும் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது. பற்றாக்குறையைச் சமாளிக்க, போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.