தங்கம் எவ்வளவு விலை அதிகரித்தாலும், தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் மக்களிடையே இன்னும் போகவில்லை. உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, தங்க பயன்பாடு அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா.
ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே தான் பலரும் தங்கத்தினை வாங்கி குவித்து வருகிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,760க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,595க்கும் விற்பனையானது.