தற்போது வழக்கமாக வரும் ரூ.1,000 தொகை, புதிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு பின் ரூ.2,500 ஆக உயர்ந்து உங்கள் கணக்கில் நேரடியாக விழ வேண்டுமெனில், கீழே உள்ள தொழில்நுட்பச் சரிபார்ப்புகளை உடனடியாகச் செய்ய வேண்டும்:
1. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு (Aadhaar Seeding)
அரசின் இந்த உதவித்தொகை ‘நேரடிப் பணப்பரிமாற்றம்’ (DBT) மூலம் மட்டுமே வழங்கப்படும். எனவே, உங்கள் தற்போதைய வங்கிச் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உங்கள் வங்கிக்குச் சென்று உடனே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. வங்கியின் e-KYC சரிபார்ப்பு
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் முடங்கிக் கிடக்கும் வங்கி கணக்குகளுக்குப் பணம் போய்ச் சேராது. இதனால் அரசு அனுப்பும் ரூ.2,500 திரும்பச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக உங்கள் வங்கி கிளைக்குச் சென்று விரல் ரேகை அல்லது மொபைல் OTP மூலம் e-KYC சரிபார்ப்பை முடித்து, கணக்கைச் செயல்பாட்டில் (Active) வைக்கவும்.
3. ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் மொபைல் எண்
உங்கள் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்று பாருங்கள். புதிய திட்டம் அமலுக்கு வரும்போது தகுதி குறித்த அறிவிப்புகள் மற்றும் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகள் (SMS) இந்த எண்ணிற்குத்தான் வரும்.