பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைத்ததைத் தொடர்ந்து விஜய் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் இணைந்து பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து பெரும்பான்மைக்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுமார் 1.30 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், IUML உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நாளை காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.