Thalapathy as CM | தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த நிலையில் நாளை காலை விஜய் பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்ற 3 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்ம (118 தொகுதிகள்) கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதனைத் தொடர்ந்து முதல் கட்சியாக காங்கிரஸ் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது.
24
120 உறுப்பினர்கள் ஆதரவு
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெக கூட்டணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்தவாறு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் விஜய்க்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
34
நாளை பதவியேற்பு
பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைத்ததைத் தொடர்ந்து விஜய் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் இணைந்து பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து பெரும்பான்மைக்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுமார் 1.30 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், IUML உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நாளை காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் அவகாசம் வழங்கி உள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.