இந்த வசதியின் மூலம், பயணிகளுக்கும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். அவர்கள் ஆர்டர் செய்த உணவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இந்த சேவை முதலில் விவேக் எக்ஸ்பிரஸில் (ரயில் எண் 22503/04) ஒரு பைலட் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
விவேக் எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் ஆகும். இப்போது, ஐ.ஆர்.சி.டி.சி இந்த இ-பேன்ட்ரி வசதியை சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ், ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ், கர்நாடகா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், மங்களத்வீப் எக்ஸ்பிரஸ், கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், பஸ்சிம் எக்ஸ்பிரஸ், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், பூர்வா எக்ஸ்பிரஸ், லிச்சாவி எக்ஸ்பிரஸ், ஆசாத் ஹிந்த் எக்ஸ்பிரஸ், மால்வா எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-பரூனி எக்ஸ்பிரஸ் மற்றும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.