மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூற்றுப்படி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் 983 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் அதிகமாக வசூலிக்கும் டாப் 10 சுங்கச்சாவடிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? 2024ஆம் நிதியாண்டில், இந்த 10 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இருந்து வசூலான பணம் 3300 கோடி ரூபாய் ஆகும். இந்த 10 சுங்கச்சாவடிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை வசூலான தொகை 14,045 கோடி ரூபாய் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.