வசூல் வேட்டையில் கில்லி: நாட்டின் 5 பணக்கார ரயில்கள் எதுனு தெரியுமா?

First Published Sep 16, 2024, 10:41 PM IST

சாதாரண மக்களுக்குப் பயண வசதியை வழங்கும் இந்திய ரயில்வே மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம் ரயில்வேயில், ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் வருமானத்தை ஈட்டித் தரும் ரயில்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வேஸ் ... தினமும் லட்சக்கணக்கான பயணிகளை அவர்களின் சேருமிடங்களை அடையச் செய்யும் பொது போக்குவரத்து அமைப்பு. நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்திய ரயில்வே மக்களுக்கு மிகவும் நெருக்கமானது. பலருக்கு ரயிலில் பயணிப்பது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல... ஒரு உணர்வு. இந்தியர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ரயில்வே, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது போக்குவரத்துடன் சரக்கு போக்குவரத்தையும் இந்தியன் ரயில்வேஸ் மேற்கொள்கிறது.
 

இந்தியன் ரயில்வே

மற்ற போக்குவரத்து துறைகளுடன் ஒப்பிடும்போது ரயில் பயணம் வசதியானது, பாதுகாப்பானது மட்டுமல்ல, மலிவானது. எனவே ஏழை, நடுத்தர மக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் ரயில்களையே பெரிதும் நாடுகிறார்கள்... இப்படி சாதாரண மக்களின் பயண சாதனமாக ரயில்கள் மாறிவிட்டன. ஆண், பெண், சாதி, மத, பிராந்திய வேறுபாடுகளை அறியாது... தன்னை நாடுபவர்களை அவர்களின் சேருமிடங்களை அடையச் செய்வதே ரயிலின் வேலை. அதனால் தான் நூறு ஆண்டுகளைக் கடந்தாலும் ரயில்வேயின் மதிப்பு சிறிதும் குறையவில்லை. 

ஆனால், ஏழைகளுக்கு உற்ற துணையாக இருக்கும் இந்த ரயில்வேயும் ஏழைதான் என்று நினைத்தால் அது தவறு. நம் இந்தியன் ரயில்வேஸ் பொரளாதாரத்தில் மிகவும் வலிமையாக உள்ளது. இந்த நிதியாண்டில் (2024-25) ரயில்வேக்கு ரூ.2,62,200 கோடியை ஒட்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய பணக்கார நிறுவனம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

நம் ரயில்வேயில் நூறு கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கும் ரயில்களும் உள்ளன. இந்திய ரயில்வேக்கு சில ரயில்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட டாப் 5 ரயில்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். 

Latest Videos


பெங்களூரு எக்ஸ்பிரஸ்

1.பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் : 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் ரயில் இது. இந்த ரயில் 2,367 கி.மீ. தூரம் பயணிக்கிறது. வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இதனால் எப்போதும் இந்த ரயில் மிகவும் நெரிசலாகக் காணப்படும். அதிகமானோர் பயணிக்கிறார்கள் என்றால் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதுதானே அர்த்தம். 

பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2022-23 ஆம் ஆண்டில்  5,09,510 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ.176 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே

2. சீல்டா ராஜதானி எக்ஸ்பிரஸ் : 

நாட்டின் தலைநகர் டெல்லியையும், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவையும் இணைக்கும் ரயில் 12314 சீல்டா எக்ஸ்பிரஸ். இந்த ரயிலும் நாட்டின் மிகவும் நெரிசலான ரயில்களில் ஒன்று. 2022-23 ஆம் ஆண்டில் இந்த ரயிலில் 5,09,164 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ.128 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.  

3. திப்ருகர் எக்ஸ்பிரஸ் : 

அசாமில் உள்ள திப்ருகரிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ரயில் இது. இந்த ரயில் கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அவர்களின் சேருமிடங்களை அடையச் செய்துள்ளது. இதன்மூலம் ரூ.126 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 
 

இந்தியன் ரயில்வே

4. மும்பை தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் : 

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ரயில் இது. நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில் என்பதால் இதில் எப்போதும் அதிகமானோர் பயணிப்பார்கள். கடந்த ஆண்டு இந்த ரயிலில் 4,85,794 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ.122 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

5. திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் : 

அசாமில் உள்ள திப்ருகரிலிருந்து டெல்லிக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் எப்போதும் நெரிசலாகவே இருக்கும். அதனால் வருமானமும் அதிகமாகக் கிடைக்கிறது.  

திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆண்டு 4,20,215 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரயில்வேக்கு ரூ.116 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது. 

click me!