400 சொகுசு கார்கள்; கோடீஸ்வரராக மாறிய முடி திருத்தும் தொழிலாளர்! இவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Published : Aug 22, 2024, 04:33 PM ISTUpdated : Aug 22, 2024, 09:56 PM IST

ஒரு சாதாரண முடிதிருத்தும் தொழிலாளியாக இருந்து, ரமேஷ் பாபு தனது விடாமுயற்சியாலும், தொழில் நுணுக்கத்தாலும் கோடீஸ்வரராக உயர்ந்தார். 400க்கும் மேற்பட்ட கார்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அவரது வெற்றிக் கதை, உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

PREV
17
400 சொகுசு கார்கள்; கோடீஸ்வரராக மாறிய முடி திருத்தும் தொழிலாளர்! இவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
ramesh babu

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரம்பரை பரம்பரையாக சிலர் கோடீஸ்வரராக இருப்பார்கள். சிலர் தங்கள் செய்யும் தொழில்கள் மூலம் நல்ல லாபம் பெற்று பெரும் பணக்காரராக மாறுகின்ரனர். ஆனால் ஒரு முடிதிருத்தும் தொழிலாளியிலிருந்து ஒரு கோடீஸ்வரராக மாறிய நபர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்?

27
ramesh babu

மன உறுதி மற்றும் வணிக புத்திசாலித்தனம் மூலம் தனது பாதையை செதுக்கி, செல்வத்தை குவித்து, உலகின் மிக ஆடம்பரமான கார்களை உள்ளடக்கிய 400 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வலம் வருகிறார் ரமேஷ் பாபு. 13 வயதில், அவர் தனது குடும்பத்திற்கு உதவியாக இருக்க செய்தித்தாள் விநியோகம் மற்றும் பால் விநியோகம் போன்ற வேலைகளை செய்து வந்தார்.

37

மேலும் தனது தந்தையின் எளிமையான முடிதிருத்தும் கடையை நிர்வகித்தார். சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது கல்வியைத் தொடர்வதில் உறுதியாக இருந்தார், பகலில் விரிவுரைகளில் கலந்து கொண்டார் மற்றும் இரவு வெகுநேரம் வரை சலூனில் உதவினார். அவரது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது, மேலும் அவர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ பெற்றார்.

47

இதன் மூலம் ரமேஷ் பாபு தனது எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தார். 1993 இல், தனது சேமிப்பு மற்றும் மாமாவின் ஆதரவைப் பயன்படுத்தி, ரமேஷ் பாபு தனது முதல் வாகனமான மாருதி ஆம்னியை வாங்கினார். அதை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈர்த்தார்.

பெங்களூரில் அவரது கார் வாடகை தொழிலில் தொடக்கமாக இது அமைந்தது. கார் வாடகைக்கான தேவை அதிகரித்ததால், அவரின் வாகன எண்ணிக்கையும் விரிவடைந்தது. தானே கார் ஓட்டி வந்த அவர், வளர்ந்து வரும் தனது நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்களை நியமித்து வாடகை கார் தொழிலை செயல்படுத்தி வந்தார்..

57

சொகுசு கார் வாடகை சந்தையில் நுழைந்ததன் மூலம் ரமேஷ் பாபுவின் வாழ்க்கையில் திருப்புமுனை வந்தது. 2004 வாக்கில், அவர் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் செடானை வாங்கினர். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் மெர்சிடிஸ் மேபேக் போன்ற விலை உயர்ந்த கார்களை வாங்கினார். அவரின் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ், உள்ளூர் வாடிக்கையாளர்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சேவை செய்து, சொகுசு கார் வாடகை துறையில் வேகமாக முன்னேறியது.

67

ரமேஷ் பாபுவிடம், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பல வாகனங்களை உள்ளடக்கிய ஆடம்பர செயல்களை சேகரிப்புக்காகப் புகழ் பெற்றிருந்தாலும், அவரின் நிறுவனத்தில் மினி பேருந்துகள் மற்றும் வேன்கள் முதல் விண்டேஜ் மாடல்கள் மற்றும் பட்ஜெட் கார்கள் வரை பல வாகனங்கள் உள்ளன.

77

இன்று, ரமேஷ் பாபுவின் நிகர மதிப்பு சுமார் ரூ. 1,200 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து இந்தியாவின் குறிப்பிடத்தக்க பில்லியனர்களில் ஒருவராக மாறுவதற்கான அவரது பயணத்தின் சான்றாகும். விடாமுயற்சி, கடின உழைப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு தீவிரமான தொழில்முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றை ரமேஷ் பாபுவின் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரமேஷ் பாபுவின் கதை, ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு மட்டுமல்ல, கனவை இடைவிடாமல் தொடர வேண்டும் என்ற உறுதியும் உள்ள அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை.

click me!

Recommended Stories