இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது 'குதிரைக்கொம்பு' என்றாலும், குறைந்த கட்டணத்தில் சொகுசான பயணத்திற்காக மக்கள் ரயிலையே நம்பியுள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 7,301 ரயில் நிலையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாளம், ஒரு பெயர் உண்டு. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் நிலையம் மட்டும் சுமார் 18 ஆண்டுகளாகப் பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது. என்னடா உளர்ற என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.
பெயர் இல்லாத ரயில் நிலையம்
நான் கூறுவது உண்மை தான். மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இந்த வினோத ரயில் நிலையம் அமைந்துள்ளது.
பான்குரா - மசாகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், கடந்த 2008-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை இந்த நிலையத்தின் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் வெறும் 'மஞ்சள்' நிறத்தில் மொட்டையாகவே காட்சியளிக்கின்றன.