உச்சத்தை தொடப்போகும் தங்கம் விலை
இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலையானது சரிந்தது. ஒரு சவரனுக்கு 4100 ரூபாய் வரை குறைந்தது.
இதனால் தங்கத்தை வாங்க மக்கள் நகைக்கடைகளில் கூடினர். கடன் வாங்கியோ பழைய நகைகளை அடகு வைத்தோ நகைகளை வாங்கி குவித்தனர். இதற்கு காரணம் தற்போது குறைந்த தங்கத்தின் விலை எந்த நேரத்திலும் திடீரென உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையும் அடுத்த ஒரு மாதமாக நாள் தோறும் ஏறி இறங்கி வருகிறது.