ஏறி இறங்கும் தங்கம் விலை
இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சரிய தொடங்கியது. அந்த வகையில் ஒரு சவரனுக்கு 4120 ரூபாய் குறைந்தது. இதனையடுத்து இந்த நல்ல சான்ஸ் விட்டுவிடக்கூடாது என மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்கினர். குறிப்பாக தங்களிடம் உள்ள நகைகளை அடகுவைத்தோ, கடன் வாங்கியோ நகைகளை வாங்கினர்.
இதனையடுத்து அடுத்த ஒரு சில நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் பழையபடியே அதிகரித்தது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 3ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.