பெருநகரம் மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இதுவரை பராமரித்து வந்த ரூ.10,000-க்கு பதிலாக, இனி ரூ.50,000 வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.5,000 இருந்த குறைந்தபட்ச இருப்பு ரூ.25,000 ஆகவும், கிராமப்புறங்களில் ரு.2,500 இருந்தது ரு.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த மினிமம் பேலன்ஸ் விதிமுறையை கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.