வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கு (FD) 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு (Insurance) இருக்கும். ஆனால், ஆர்பிஐ பத்திரங்களுக்கு முழுமையான அரசு உத்தரவாதம் உண்டு. பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும்; நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதுமட்டுமின்றி, வட்டியும் மிக அதிகமாகக் கிடைக்கும். பல வங்கிகள் 6.5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன. ஆனால், ஆர்பிஐ பத்திரங்கள் தற்போது 8 விழுக்காட்டிற்கும் மேல் வட்டி அளிக்கின்றன. மேலும், இந்தப் பத்திரங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக லாபம் கிடைக்கும்.
இந்தப் பத்திரங்களை எப்படி வாங்குவது?
'RBI Retail Direct Portal' தளம் வழியாக நேரடியாகக் கணக்குத் தொடங்கி இவற்றை வாங்கிக் கொள்ளலாம். இதற்குத் தனிப்பட்ட கட்டணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்யும் பணத்தை 7 ஆண்டுகள் வரை திரும்ப எடுக்க முடியாது. எனவே, அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் பணத்தை இதில் முதலீடு செய்யக் கூடாது. நீண்ட கால அடிப்படையில் (Long Term) முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு மட்டுமே இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இறுதியாகச் சொல்வது என்னவென்றால்!
உங்கள் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் நல்ல வட்டியும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த ஆர்பிஐ பத்திரங்களில் முதலீடு செய்வது மிகச்சிறந்தது. எனினும், மொத்தப் பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், FD-கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஆர்பிஐ பத்திரங்கள் எனப் பிரித்து முதலீடு செய்வது மிகவும் புத்திசாலித்தனமானது.
இதையும் படிங்க : ₹5 lakhs for Women:பெண்கள் பெயரில் நிலம் வாங்க அரசே 5 லட்சம் ரூபாய் தருது! யார் யார் வாங்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?