தட்கல் திட்டத்தில் அப்ளை செய்பவர்களுக்கு, சாதாரண முறையில் அப்ளை செய்பவர்களை விட அப்பாயிண்ட்மென்ட் சீக்கிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதால், பணிகள் வேகமாக நடக்கும். பல சமயங்களில், முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, அதன் பிறகுதான் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்யப்படும். இது விண்ணப்பதாரர்களின் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துகிறது.
இந்த விஷயங்களை மறக்காதீங்க
தட்கல் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்வதற்கு முன், தேவையான எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான தகவல்கள், முழுமையற்ற ஆவணங்கள் அல்லது அப்ளிகேஷனில் உள்ள பிழைகள் காரணமாக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். எனவே, அப்ளிகேஷன் ஃபார்ம் நிரப்பும்போது அனைத்து விதிகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.