அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. அனைவரும் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு!

Published : Sep 24, 2025, 01:58 PM IST

துர்காபூஜையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த உயர்வு, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது, இதன் மூலம் ஊழியர்களின் மொத்த DA 36% ஆக உயர்கிறது.

PREV
14
அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் தங்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு, வரும் தீபாவளிக்கு முன் DA/DR உயர்வு அறிவிக்கப்படும் என பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு 2% DA/DR உயர்வை அறிவித்தது, 2025 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் ஏற்பட்ட பாக்கியும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டது.

24
மத்திய அரசு

தற்போது, ​​மார்ச் மாத உயர்வின் பின்னர், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் 55% அகவிலைப்படி/DR பெறுகின்றனர். மாநில அரசு இந்த 3% கூடுதல் உயர்வு, ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை கால நிம்மதியை அளிக்கும் வகையில் ஒரு முக்கியமான தீர்மானமாக உள்ளது கருதப்படுகிறது. திரிபுரா மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.

34
திரிபுரா அரசு

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, சட்டமன்றத்தில் 3% கூடுதல் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியர்களுக்கு DR வழங்கப்படுவதாக அறிவித்தார். இது துர்காபூஜாவை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு பரிசாகவும் கருதப்படுகிறது. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த முடிவு, மாநிலத்தின் 1,05,739 ஊழியர்களுக்கும் 84,342 ஓய்வூதியர்களுக்கும் பயனளிக்கிறது. இதனால் இந்த நிதியாண்டின் அடுத்த மாதங்களில் சுமார் ₹125 கோடி கூடுதல் சுமை அரசுக்கு ஏற்படும்.

44
டிஏ உயர்வு

இந்த 3% உயர்வுடன், திரிபுரா அரசு ஊழியர்களின் DA 36% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 52% DA வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், திரிபுரா அரசு தொடர்ந்து டிஏ உயர்வுகளை வழங்கி வருகிறது. 2022-ல் 4%, 2023-ல் 3% மற்றும் 2024-ல் 2% உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக அரசு தொடர்ந்து செயல்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories