Gold Rate Today (October 29): மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்.! இன்றைய விலை இதுதான்.!

Published : Oct 29, 2025, 09:51 AM IST

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ₹1,080 அதிகரித்து ₹89,680 ஆக உள்ளது. உலகளாவிய காரணிகளால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

PREV
13
மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை

கடந்த இரு நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்வு பாதையை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் வெள்ளி விலையும் லேசாக அதிகரித்துள்ளது. இந்த இரு உலோகங்களின் விலை உயர்வு நுகர்வோரை பாதித்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நகைக்கடைகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

சென்னை சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 135 ரூபாய் ஏற்றம் கண்டு 11,210 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை 1,080 ரூபாய் உயர்ந்து 89,680 ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த வார இறுதியை விட கணிசமான உயர்வாகும். வெள்ளி விலையும் பின்தங்கவில்லை. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து 166 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1,66,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

23
விலை ஏற்றத்திற்கான காரணம்

இந்த விலை மாற்றங்கள் நகை வாங்க திட்டமிட்டிருந்த பலரை பின்வாங்கச் செய்துள்ளன. திருமண சீசன் நெருங்குவதால், விலை சரிவை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் இருப்பில் தங்கத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் பொற்காசுகளை கொள்முதல் செய்து வருகின்றன. மேலும், புவிசார் அரசியல் பதற்று, பணவீக்க அச்சம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவை முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்தான தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன. 

33
தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்தாலும், தங்கத்தின் தேவை தொடர்ந்து உயர்வதால் விலை ஏற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கமும், இறக்குமதி வரியும் விலையை மேலும் தூண்டுகிறது. எனவே, அடுத்த சில நாட்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், 90,000 ரூபாயை சவரன் தாண்டும் எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால், தேவைப்படுபவர்கள் விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories