சென்னையில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது, ஒரு சவரன் ₹1,320 சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கவனம் செலுத்துவதே இந்த விலை சரிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடையில் குவிந்து வருகின்றனர்.
23
ஆபரணத்தங்கத்தின் விலை.! இன்றைய விலை நிலவரம்.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ரூ.11260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,320 ரூபாய் குறைந்து 90,080 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
33
காரணமும் காரியமும்.!
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.