தங்கத்தில் முதலீடு செய்தால் அவரச தேவைக்கு பணமாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்ற காரணத்திற்காகவும், தங்களது குழந்தைகளின் படிப்பு, திருமணத்திற்கும் சேமிப்பாகவும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. குறிப்பாக கடந்த ஆக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் ஒரு சவரன் தங்கம் 59,640 ரூபாய் என்ற அதிகப்பட்ச உச்சத்தை பதிவு செய்தது. இந்த விலை உயர்வானது இன்னும் அதிகரிக்கும் என கூறப்பட்டது.