Ganesha Currency: ஒரு முஸ்லிம் நாட்டில், அவங்களோட கரன்சி நோட்டுல நம்ம விநாயகர் படம் இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா? அது எந்த நாடு, எதுக்காக விநாயகர் படத்தை அச்சிட்டாங்கன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இந்தியாவில் மட்டுமல்ல, மொழி, மதம், நாடு கடந்து உலகம் முழுவதும் விநாயகரை மக்கள் வழிபடுகிறார்கள். தடைகளைத் தகர்க்கும் பிள்ளையார், உலக அளவில் கொண்டாடப்படுகிறார்.
24
விநாயகர் படம் போட்ட கரன்சி
சுமார் 87% முஸ்லிம்கள் வாழும் இந்தோனேசியாதான், தனது 20,000 ரூபாய் (Rupiah) நோட்டில் விநாயகர் படத்தை அச்சிட்டுள்ளது. நோட்டின் முன்பக்கம் விநாயகரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சர் 'கி ஹஜர் தேவந்தாரா'வும் உள்ளனர். பின்பக்கம், மாணவர்கள் படிக்கும் வகுப்பறை உள்ளது. கல்வி, அறிவின் கடவுளாக விநாயகரைப் பார்ப்பதால், இந்த நோட்டில் அவரை இடம்பெறச் செய்துள்ளனர். 1990களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, தடைகளை நீக்கும் விநாயகர் தங்கள் கரன்சியை காப்பார் என்ற நம்பிக்கையிலும் இதை வெளியிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.
ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில், மக்கள் விநாயகரை 'காங்கிடென்' என அழைக்கின்றனர். அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சிக்கு இவரை வழிபடுகிறார்கள். தாய்லாந்தில் விநாயகரை 'ஃப்ரா ஃபிகானெட்' என்கின்றனர். அந்நாட்டின் சாச்சோஎங்சாவ் மாகாணத்தில், சுமார் 128 அடி (39 மீட்டர்) உயர வெண்கல விநாயகர் சிலை உள்ளது. இது உலகின் பெரிய சிலைகளில் ஒன்றாகும்.
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் விநாயகருக்கு நான்கு முக்கியக் கோயில்கள் உள்ளன. மக்கள் இவரை நகரப் பாதுகாவலராக வழிபடுகின்றனர். திபெத்திய பௌத்தத்தில், தடைகளை நீக்கும் கடவுளாகவும், செல்வத்தை அள்ளித்தரும் குபேரனாகவும் விநாயகரைப் பார்க்கின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.