இப்போது, இந்த நடைமுறையை மாற்றி புதிய தீர்வை அறிவித்துள்ளது மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம். அதன் படி, இனிமேல் ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருப்பவர்கள், சுங்கச்சாவடியில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் 1.25 மடங்கு தொகை மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது. அதாவது, முன்பு ரூ.200 செலுத்த வேண்டிய இடத்தில், இனிமேல் ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.