மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட கார் ஃபாஸ்டேக்குகள் பொதுவாக இனி கேஒய்சி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஃபாஸ்டேக் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, பழுதடைந்ததாக அல்லது தவறான விவரங்களுடன் வழங்கப்பட்டதாக புகார் வந்தால் மட்டுமே, மீண்டும் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படும். எந்த புகாரும் இல்லாத பட்சத்தில், தற்போது பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக்குகள் வழக்கம்போல செயல்படும். இந்த மாற்றம், வாகன உரிமையாளர்களுக்கு தேவையற்ற சிரமங்களை குறைக்கும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.