பென்ஷன் உயர்வு மட்டுமல்லாமல், தொழிலாளர் நலன் சார்ந்த பல முக்கியப் பரிந்துரைகளையும் இந்தக் குழு முன்வைத்துள்ளது. அவற்றை கிழே பார்ப்போம்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள்: நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு இஎஸ்ஐ (ESI) மற்றும் பிஎஃப் (PF) பலன்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கிக் ஊழியர்கள் (Gig Workers): ஸ்விக்கி, ஸொமேட்டோ, ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் கிக் ஊழியர்களை 'இ-ஷ்ரம்' (e-Shram) போர்ட்டலில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். அவர்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் விபத்து இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும்.
சுரங்கப் பாதுகாப்பு: நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுரங்கங்கள் குறித்த முழுமையான தரவுத்தளத்தை (Database) உருவாக்க வேண்டும். சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ESI வரம்பு விரிவாக்கம்: அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்க, இஎஸ்ஐசி (ESIC) திட்டத்தின் கீழ் உள்ள சம்பள வரம்பை மாற்றி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
நிதி ஒழுங்கு: தொழிலாளர் நல அமைச்சகம், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிக்கும், செலவழிக்கப்படும் தொகைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.