2024-25 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து பிப்ரவரி 28 அன்று நடைபெறும் EPFO வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும்.
2025 பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசாங்கம் பல அறிவிப்புகளையும் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளது. இவற்றில் மிக முக்கியமானது ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானத்தை வரி விலக்கு அளிப்பதாகும். இப்போது அரசாங்கம் விரைவில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மற்றொரு பரிசை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்.PF வட்டி விகிதத்தை அரசு உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25
EPFO வாரியக் கூட்டத்தில் இது குறித்து முடிவு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம் பிப்ரவரி 28 அன்று நடைபெற உள்ளது. இதில், 2024-25 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. . இந்தக் கூட்டம் மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையில் நடைபெறும். முதலாளிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்பார்கள். இருப்பினும், கூட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளியிடப்படவில்லை.
35
PF வட்டி விகிதம் ஏன் அதிகரிக்கப்படும்?
அரசாங்கத்தின் முழு கவனமும் தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உள்ளது, இதற்காக தேவை மற்றும் நுகர்வை அதிகரிப்பது அவசியம். இதனால் தான் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளித்து வருகிறது. வருமான வரி விலக்கு வரம்பை அதிகரித்த பிறகு, இப்போது அரசாங்கம் PF வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம். இது நடுத்தர வர்க்க ஊழியர்களின் PF சேமிப்பில் அதிக வருமானத்தை ஈட்டும், இதனால் அவர்கள் மற்ற செலவுகளை அதிகரிக்க முடியும்.
45
PF மீதான வட்டி இப்போது எவ்வளவு?
அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், PF கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த முறையும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். 2022-23 ஆம் ஆண்டில் PF வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியது. பின்னர் 2023-24 ஆம் ஆண்டில் அது 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அப்போதிருந்து, PF க்கும் அதே வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, அதை அரசாங்கம் இப்போது அதிகரிப்பதை பரிசீலிக்கலாம்.
55
EPFO வட்டியை எவ்வளவு அதிகரிக்கும்?
வங்கிகளின் தற்போதைய அடிப்படை விகிதத்தைக் கருத்தில் கொண்டு, PF வட்டி விகிதங்களில் அதிக அதிகரிப்புக்கு வாய்ப்பில்லை. அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் கடந்த முறை போலவே 0.10 சதவீதம் அதிகரிக்கலாம். நாட்டில் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் EPFO கணக்குகள் உள்ளன. புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து அதில் சேர்ந்து வருகின்றனர். EPFOவின் ஓய்வூதிய நிதியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.