EPFO 3.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு! இனி PF பணம் ஏடிஎம்மில் ஈசியா எடுக்கலாம்!

Published : Jan 06, 2025, 08:01 PM ISTUpdated : Jan 06, 2025, 08:35 PM IST

கோடிக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட EPFO ​​3.0 வரும் ஜூன் 2025 க்குள் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

PREV
14
EPFO 3.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு! இனி PF பணம் ஏடிஎம்மில் ஈசியா எடுக்கலாம்!
EPFO 3.0 launch date

கோடிக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட EPFO ​​3.0 வரும் ஜூன் 2025 க்குள் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. செயல்திறன்மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பை நிர்வகிப்பது மேலும் எளிமையாக இருக்கும்.

EPF செயல்முறைகளை நெறிப்படுத்தும் நோக்கில் EPFO ​​3.0 பல அம்சங்களைக் கொண்டு வரும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். எளிமையான பயன்பாட்டுக்கான வடிவமைப்பு புதிய மென்பொருளின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

24
EPFO 3.0 launch features

இது வங்கி அமைப்புகளைப் போன்ற செயல்திறனை வழங்கும். இதனால் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை தடையின்றி அணுக முடியும். EPFO 3.0 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்று EPF உறுப்பினர்களுக்கான ATM கார்டுகளை அறிமுகப்படுத்துவதாகும்.

EPFO 3.0 தொடங்கப்பட்டவுடன், ஊழியர்கள் தங்கள் EPF சேமிப்பை ஏடிஎம்களில் இருந்து நேரடியாக திரும்பப் பெற முடியும். அவசர காலத்தில் ஏற்படும் நிதித் தேவையை ஈடுகட்ட மிகவும் வசதியாக இருக்கும். முதல் கட்ட இணையதள வடிவமைப்பு மற்றும் சிஸ்டம் அப்டேட்களுக்குப் பிறகு ஜனவரி 2025 இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34
EPFO 3.0 ATM withdrawal

ஏடிஎம் மூலம் பென்ஷன் பணத்தை எடுக்கும் வசதியுடன், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) மாற்றங்களைக் கொண்டுவரவும் EPFO ​​திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்பு அளவை சரிசெய்ய நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

தற்போதைய அமைப்பு, ஊழியர் மற்றும் பணிபுரியும் நிறுவனம் இருவரிடமிருந்தும் 12% பங்களிப்பைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், புதிய முறையில் பணியாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதிகமாகவோ குறைவாகவோ பங்களிக்கலாம்.

44
EPFO Members

இந்த அற்புதமான மாற்றங்களுடன், EPFO ​​3.0 முன்பை விட பயன்பாட்டுக்கு எளிதாக மாறிவிடும். ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிப்பதும் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த அப்டேட்டுகள் ஊழியர்களுக்குப் பயனளிப்பது மட்டுமல்லாமல், எதிர்பாராத நிதித் தேவைகளையும் நிவர்த்தி செய்ய உதவும்.

EPFO ​​3.0 இந்தியாவின் ஓய்வூதிய சேமிப்புச் சூழலில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும். 2025 நெருங்குகையில், இந்த புரட்சிகர மாற்றங்களை செயல்படுத்துவதில் அனைவரின் பார்வையும் இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories