Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!

Published : Dec 13, 2025, 11:47 AM IST

குறைந்த முதலீட்டில், 30 நாட்களுக்குள் கீரை சாகுபடி செய்து மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்ட முடியும். சரியான திட்டமிடல், இயற்கை உரப் பயன்பாடு மற்றும் நேரடி விற்பனை ஆகியவை இந்த சுயதொழிலில் வெற்றியை உறுதி செய்து, அதிக லாபம் பெற உதவுகின்றன.

PREV
16
மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டுவது சாத்தியமே

இன்றைய காலத்தில் குறைந்த முதலீட்டில், விரைவான வருமானம் தரும் விவசாய முறைகளைத் தேடும் மக்களுக்கு கீரை சாகுபடி ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது. தினசரி சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் கீரைகளுக்கு சந்தையில் எப்போதும் நல்ல தேவை இருப்பதால், சரியான திட்டமிடலுடன் செய்தால் மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டுவது சாத்தியமே.

26
30 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகிவிடும்

கீரை சாகுபடியின் முக்கிய பலம், குறைந்த நிலப்பரப்பு + குறைந்த காலம் + தொடர்ச்சியான அறுவடை. அரைக்கீரை, பசலைக் கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை போன்றவை 20–30 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு ஏக்கர் நிலம் இல்லாவிட்டாலும், கால் ஏக்கர் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கூட கீரை வளர்க்க முடியும்.

36
திட்டமிட்டால் கைநிறைய வருமானம் கிடைக்கும்

ஒரு கால் ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்தால், விதை, உரம், நீர்ப்பாசனம், வேலைச்செலவு ஆகியவை சேர்த்து சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை முதலீடு போதுமானது. 25–30 நாட்களில் முதல் அறுவடை கிடைக்கும். வாரத்திற்கு 2 முறை அறுவடை செய்ய முடிவதால், மாதத்திற்கு சராசரியாக 600–800 கிலோ கீரை கிடைக்கும். ஒரு கிலோ கீரை ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகும். இதனால் மாத வருமானம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை எளிதாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

46
லாபத்தை அதிகரிக்க நேரடி விற்பனை மிக முக்கியம்

லாபத்தை அதிகரிக்க நேரடி விற்பனை மிக முக்கியம். அருகிலுள்ள காய்கறி சந்தை, மளிகை கடைகள், ஹோட்டல்கள், டிபன் கடைகள், அல்லது வீடு வீடாக விற்பனை செய்தால் இடைத்தரகர் செலவு குறைந்து கூடுதல் லாபம் கிடைக்கும். இன்றைக்கு பலர் வாட்ஸ்அப் குழுக்கள், சமூக வலைதளங்கள் மூலம் Fresh Greens என்ற பெயரில் நேரடி விற்பனையும் செய்து வருகிறார்கள்.

56
இதையெல்லாம் தெரிஞ்சுக்கனும்

இயற்கை உரங்கள், கம்போஸ்ட், ஜீவாமிர்தம் போன்றவற்றைப் பயன்படுத்தி கீரை வளர்த்தால், ஆர்கானிக் கீரை என்ற பெயரில் கூடுதல் விலையும் பெற முடியும். மேலும், தொடர்ச்சியாக சாகுபடி செய்ய விதைத் தேர்வு, சரியான நீர்ப்பாசனம், பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் இழப்புகள் குறையும்.

66
ஒரு சிறந்த சுயதொழில் இதுதான்

மொத்தத்தில், வேலை வாய்ப்பும் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், கீரை சாகுபடி என்பது விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த சுயதொழில். சிறிய முயற்சி, சரியான திட்டமிடல், நேரடி சந்தை அணுகல் – இந்த மூன்றும் இருந்தால் மாதம் ரூ.50,000 வருமானம் ஈட்டுவது கனவு அல்ல, நிச்சயம் உண்மை!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories