Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?

Published : Mar 30, 2026, 12:05 PM IST

ஈரானின் எண்ணெய் வளத்தின் மீது தனது பார்வை இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

PREV
15
டிரம்ப் சூசகம்
அமெரிக்கா, ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான 'கார்க் தீவை' (Kharg Island) கைப்பற்றலாம் என டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் இந்த தீவு வழியாகத்தான் உலக நாடுகளுக்குச் செல்கிறது. ஒரு பேட்டியில், "அந்தத் தீவில் ஈரானிடம் எந்த பாதுகாப்பும் (Defence) இல்லை, அதை நாங்கள் மிக எளிதாகக் கைப்பற்றிவிடுவோம்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
25
டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை
டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை, ஒரு கெடுவையும் விதித்துள்ளார். ஈரான் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் (எண்ணெய் தளங்கள்) மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதுவரை ஈரானின் 13,000 தளங்களை அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளதாகவும், இன்னும் 3,000 இலக்குகள் மீதமிருப்பதாகவும் டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.
35
தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள்
தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. பென்டகன் (Pentagon), சுமார் 10,000 வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 3,500 ராணுவ வீரர்கள் மற்றும் 2,200 மரைன் கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை அன்று அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் படைப்பிரிவு, குறிப்பாக 'நிலப்பரப்பைக் கைப்பற்றி, அதைத் தக்கவைப்பதற்காக' பயிற்சி பெற்றவர்கள்.
45
டிரம்ப் போடும் ஆட்டம்பாம்ப்
ஈரானில் பழைய ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் மற்றொரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மரணத்திற்குப் பிறகு, தற்போது புதிய மற்றும் திறமையான நபர்கள் ஆட்சியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், காமெனியின் மகன் முஜ்தபா காமெனி ஒன்று இறந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம் என்றும், அவரைப் பற்றி நீண்ட காலமாக எந்த தகவலும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
55
பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம்
டிரம்பின் இந்த ஆக்ரோஷமான போக்கால் உலக சந்தையில் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரலுக்கு 116 டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது 50% உயர்வாகும். ஒருவேளை கார்க் தீவு மீது தாக்குதல் நடந்தால், உலகின் எண்ணெய் விநியோகச் சங்கிலி முடங்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம். கார்க் தீவைத் தாக்குவது ஆபத்தானது என்றும், இது போரை நீண்ட காலத்திற்கு இழுத்துச் சென்று அமெரிக்க வீரர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories