Investment tips: கடனை சொத்தாக மாற்றும் ரகசியம்! இது தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரன்!

Published : Jul 16, 2025, 12:13 PM IST

கடன் என்பது பயன்பாட்டைப் பொறுத்து சொத்தாகவோ சுமையாகவோ மாறும். சொத்து உருவாக்கத்தில் கடனைப் பயன்படுத்துவது நிதி சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். சரியான திட்டமிடல் மற்றும் கடன் மேலாண்மை அவசியம்.

PREV
14
வளர்ச்சியை கொடுக்கும் "கடன்"

நாம் பலருக்கும் “கடன்” என்ற சொல்லில் அச்சம் அதிகம். “கடன் வாங்குவது தவறு” என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மையில், வளர்ச்சி நோக்கில் எடுத்த கடன் நமக்குச் சொத்தாக மாறும். உலகின் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் கடன் மூலமாகவே தங்களின் வியாபாரப் பேரரசியலை கட்டியெடுத்துள்ளன. அதுபோலவே நாமும் சொத்து உருவாக்கம் எனும் இலக்குடன் கடனை பயன்படுத்தினால் அது நிதி சுதந்திரம் பெற வழிகாட்டும்.

24
கடன் நல்லது எப்படி?

ஒரு கார் வாங்கியதை எடுத்துக் கொள்வோம். அதை சொந்த பயன்பாட்டுக்காக வாங்கினால் அது பொறுப்பாகவே இருக்கும் – அதாவது அதன் மீது தொடர்ந்து செலவு செய்ய வேண்டிய நிலை வரும். ஆனால் வாடகைக்காக வாங்கினால் அந்தக் கார் வருமானத்தை உருவாக்கும் சொத்தாக மாறும். அதனால் கடன் எப்போதும் துன்பம் தருவதாக அல்ல; அது எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம்.பலர் கிட்டத்தட்ட எந்த வருமானத்தையும் தராத செலவுகளுக்காக - வெளிநாட்டுச் சுற்றுலா, மோபைல் போன், விருந்துகள் போன்றவை - கடன் வாங்குகின்றனர். இது நிதிநிலை மோசமாகும் நோக்கில் அழைத்து செல்லும்.

34
வருமானத்தில் இஎம்ஐ எவ்வளவு இருக்கு வேண்டும்?

கடனைத் திட்டமிட்டு, சொத்து உருவாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அடிப்படையில், ஒருவரின் மாத வருமானத்தில் சுமார் 30% வரை மட்டுமே தவணை (EMI) செலவு இருக்கலாம். மேலதிகமாக செயலற்ற வருமானம் இருந்தால் (வங்கி வட்டி, வாடகை வருமானம் போன்றவை), அதில் 50% வரை தவணை செலவு செய்யலாம். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.1,20,000 சம்பளம் பெற்றால் அவருக்கு வங்கி வட்டியிலிருந்து ரூ.30,000 கிடைக்கிறது. எனவே, மொத்த வருமானம் ரூ.1,50,000. இதில் அவர் அதிகபட்சம் ரூ.45,000 வரை தவணை செலுத்தலாம். இதைத் தாண்டுவது ஆபத்தான நிலையை உருவாக்கும்.

44
சொத்து மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும்?

நிதி சுதந்திரத்தின் அடுத்த கட்டமாக நிகர சொத்து மதிப்பைக் கணக்கிட வேண்டும். ஒருவரின் சொத்துகளை அசையும் மற்றும் அசையா சொத்துகள் என பிரிக்கலாம். கார், பங்குகள், தங்கம், வங்கி டெபாசிட்கள் போன்றவை அசையும் சொத்துகள். வீடு, விவசாய நிலம் போன்றவை அசையா சொத்துகள். இவற்றின் மதிப்பை கணக்கிடுங்கள். அதன்பிறகு அனைத்து கடன்கள், பாக்கிகள், கடன் கார்டு நிலுவைகள் ஆகிய பொறுப்புகளையும் கணக்கிட வேண்டும்.இவ்வாறு சொத்துகளின் மொத்த மதிப்பிலிருந்து பொறுப்புகளின் மொத்தத்தை கழித்தால், நிகர சொத்து மதிப்பு (Net Worth) கிடைக்கும். இந்த மதிப்பு நம்முடைய நிதி வலிமையை காட்டும் மிக முக்கியமான அளவுகோல். இது ஒவ்வொரு நாளும் மாறக்கூடும், அதனால் காலக்காலத்துக்கு கணக்கிட்டு கவனிப்பது நல்லது.சரியான முறையில் திட்டமிட்ட கடன் சொத்துகளில் முதலீடு செய்து வருமானத்தை உருவாக்கும். அந்த வருமானமே செயலற்ற வருமானம் ஆகும். அதுவே மீண்டும் சொத்தாக மாறி வளர்ச்சியை தந்து நிதி சுதந்திரத்தை ஏற்படுத்தும். அந்த வழியில்தான் கடன் நமக்குச் சொத்தாக மாறும்.

Read more Photos on
click me!

Recommended Stories